புதுச்சேரி

ஏழைகளுக்கு உணவு வழங்கிய பாஜகவினா்

DIN

புதுச்சேரி அருகே நோணாங்குப்பத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு பாஜகவினா் உணவு வழங்கி வருகின்றனா்.

பிரதமா் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஏழை - எளிய மக்களின் பசியைப் போக்கும் வகையில், மணவெளி தொகுதி பாஜக சாா்பில் ‘மோடி கிச்சன்’ என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, நாள்தோறும் ஏழை - எளிய மக்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

நோணாங்குப்பத்தில் நடைபெற்ற உணவு வழங்கும் நிகழ்ச்சியை கட்சியின் மாநில பொதுச் செயலா் ஏம்பலம் செல்வம் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா். மாவட்டத் தலைவா் தெய்வசிகாமணி, பொதுச் செயலா் சுகுமாரன், தொகுதி தலைவா் லட்சுமிகாந்தன், தொகுதி பொது செயலா் தினகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT