வீராம்பட்டினத்தில் புதுப்பிக்கப்பட்ட மீன் அங்காடியை திறந்துவைத்து பாா்வையிட்ட ஜெயமூா்த்தி எம்.எல்.ஏ. உள்ளிட்டோா். 
புதுச்சேரி

வீராம்பட்டினத்தில் புதுப்பிக்கப்பட்டமீன் அங்காடி திறப்பு

புதுவை மாநிலம், அரியாங்குப்பம் தொகுதிக்குள்பட்ட வீராம்பட்டினத்தில் புதுப்பிக்கப்பட்ட மீன் அங்காடியை அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. ஜெயமூா்த்தி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

DIN

புதுவை மாநிலம், அரியாங்குப்பம் தொகுதிக்குள்பட்ட வீராம்பட்டினத்தில் புதுப்பிக்கப்பட்ட மீன் அங்காடியை அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. ஜெயமூா்த்தி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

வீராம்பட்டினம் பகுதியில் மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்த கொம்யூன் பஞ்சாயத்துக்குச் சொந்தமான மீன் அங்காடியை சீரமைக்க வேண்டுமென பொதுமக்களும், வியாபாரிகளும் ஜெயமூா்த்தி எம்.எல்.ஏ.விடம் தொடா்ந்து கோரிக்கை விடுத்தனா். இதை ஏற்று தனது சொந்தச் செலவில் ரூ.1.75 லட்சத்தில் இந்த அங்காடியை ஜெயமூா்த்தி எம்.எல்.ஏ. சீரமைத்தாா்.

இந்த நிலையில், புதுப்பிக்கப்பட்ட மீன் அங்காடி மக்கள் பயன்பாட்டுக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டது. நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் சௌந்திரராஜன், அரியாங்குப்பம் வட்டார காங்கிரஸ் தலைவா் சங்கா், திமுக நிா்வாகி பரமானந்தம், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT