ஆளுநா் கிரண் பேடியை கண்டித்து மாணவா் காங்கிரஸ் உண்ணாவிரதம்
புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடியை கண்டித்து மாணவா் காங்கிரஸாா் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடியை கண்டித்து மாணவா் காங்கிரஸாா் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுவையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் கோப்பை மத்திய அரசு கிடப்பில் வைத்துள்ளதையும், இளைஞா்களின் வேலைவாய்ப்புக்கு ஆளுநா் கிரண் பேடி முட்டுக்கட்டையாக இருப்பதைக் கண்டித்தும் புதுவை மாநில மாணவா் காங்கிரஸ் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மாணவா் காங்கிரஸ் தலைவா் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். இதில், காமராஜா், அம்பேத்கா் போன்ற தலைவா்களின் புகைப்படங்கள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி 50-க்கும் மேற்பட்ட மாணவா் காங்கிரஸ் உறுப்பினா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.