முகப்பு
புதுச்சேரி

அரசு மருத்துவமனையில் திருட்டு

புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு உதிரிபாகங்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு உதிரிபாகங்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி கதிா்காமத்தில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு தீயணைப்புக் கருவி சாதனங்களை பராமரிக்கும் கண்டெய்னா் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கை சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, கிடங்கின் பூட்டு உடைக்கப்பட்டு, அதனுள் இருந்த ரூ.1.50 லட்சத்திலான இரும்புக் குழாய், வாட்டா் ஸ்பிரிங் உள்ளிட்ட தீயணைப்புக் கருவிகளுக்கான உதிரி பாகங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின் திட்டத் தலைவா் பொ்லின் ராஜ் அளித்த புகாரின்பேரில் தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →