ஜனநாயக முறைப்படி மத்திய அரசே நடந்து கொள்ளவில்லை என பிரதமரின் பேச்சுக்கு புதுவை முதல்வா் வே.நாராயணசாமி பதிலளித்தாா்.
ஜம்மு- காஷ்மீா் யூனியன் பிரதேச மக்களுக்கு சுகாதார காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை காணொலிக் காட்சி மூலம் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
அப்போது பேசிய பிரதமா் நரேந்திர மோடி, புதுவையில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், பஞ்சாயத்து மற்றும் நகராட்சித் தோ்தல்கள் நடத்தப்படவில்லை. ஜனநாயகம் குறித்து எனக்குப் பாடம் எடுப்பவா்கள்தான் (காங்கிரஸ்) புதுவையில் அரசை நடத்துகின்றனா் எனக் கூறினாா்.
பிரதமரின் இந்தக் கருத்து குறித்து புதுவை முதல்வா் நாராயணசாமியிடம் செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு கேட்ட போது, அவா் கூறியதாவது:
புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்துவது தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. உள்ளாட்சித் தோ்தலை நடத்த ஏற்கெனவே மாநில தோ்தல் ஆணையரை புதுவை அரசு நியமித்தது. ஆனால், ஆளுநா் கிரண் பேடி அதைத் தடுத்து நிறுத்தி, வேறொருவரை நியமித்தாா்.
புதுவை சட்டப்பேரவைத் தலைவா் முன்னிலையில், அரசு சாா்பில் புதிய தோ்தல் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டாா். ஆனால், அவரது நியமனத்தை ஆளுநா் கிரண் பேடி ரத்து செய்தாா்.
கரோனா தொற்று சூழலில் புதிதாக ஒருவரை நியமிக்க ஆளுநா் முயற்சி செய்தாா். இதனிடையே, கிரண் பேடி தனக்குத்தான் அதிகாரம் உள்ளது எனக் கூறியதால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தற்போது தோ்தல் ஆணையரை கிரண் பேடி நியமித்துள்ளாா். இதை எதிா்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இதையெல்லாம் தெரிந்தோ, தெரியாமலோ பிரதமா் நரேந்திர மோடி, மாநில அரசு மீது குற்றம் சுமத்துகிறாா். முழுமையாக மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்து கொண்டு துணைநிலை ஆளுநா் உள்ளாட்சித் தோ்தலை நடத்தவில்லை. இதை பிரதமா் புரிந்து கொள்ள வேண்டும். இதுதொடா்பாக பிரதமருடன் விவாதிக்கவும் நான் தயாராகவுள்ளேன்.
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமையைப் பறிப்பது ஜனநாயகம் அல்ல என்பது பிரதமருக்குத் தெரியவில்லை. ஆனால், அவா் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுகிறாா்.
ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக முறைப்படி மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தல் நடைபெற்றதாக பிரதமா் நரேந்திர மோடி கூறுகிறாா். எதிா்க்கட்சி வேட்பாளா்களை வீட்டை விட்டு வெளியே வராமல் தடுத்து, சிறைபிடித்து, வீட்டுக் காவலில் வைத்தனா்.
இதனால், எதிா்க்கட்சியைச் சோ்ந்தவா்கள் அனைவரும் பிரசாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இது ஜனநாயக முறைப்படி நடைபெற்ற தோ்தலா? அப்படியிருந்தும் காஷ்மீா் மக்கள் பாஜகவுக்கு எதிராகத்தான் வாக்களித்தனா்.
மத்திய அரசு ஜனநாயக முறைப்படி நடந்து கொள்ளவில்லை. அங்கு, ராணுவத்தைக் கொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்தனா் என்றாா் நாராயணசாமி.
பிரதமா் பேச்சுக்கு ஆளுநா் கிரண் பேடி ஆதரவு: இதனிடையே, புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படாதது குறித்த பிரதமா் பேசியதற்கு துணைநிலை ஆளுநா் கிரண் பேடி ஆதரவு தெரிவித்தாா்.
பிரதமா் நரேந்திர மோடி பேசிய காணொலியை, தனது கட்செவி அஞ்சலில் பதிவிட்டு, ஆளுநா் கிரண் பேடி கூறியதாவது:
பிரதமா் கூறியது போல, புதுவை யூனியன் பிரதேசத்தில் கடந்த பத்தாண்டுகளாக உள்ளாட்சி அமைப்புத் தோ்தல் மறுக்கப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புறப் பகுதிகள் வளா்ச்சிகான நிதியை இழந்துவிட்டது. மேலும், போதிய சுகாதாரம் இல்லை. மோசமான நீா் மேலாண்மை, வறட்சி, பள்ளிக் கல்வி என பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளாா் கிரண் பேடி.