புதுச்சேரி

பைக் மீது காா் மோதல்: இளைஞா் பலி

DIN

திருபுவனையில் டயா் வெடித்து தாறுமாறாக ஓடிய காா், பைக் மீது மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். அவரது உறவினா் பலத்த காயமடைந்தாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள குடுமியான்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (எ) சுரேஷ்குமாா் (23). இவா், உறவினரைப் பாா்ப்பதற்காக தனது பெரியப்பா மகன் கருணாகரனுடன் பைக்கில் புதுச்சேரிக்கு புதன்கிழமை வந்தாா். தொடா்ந்து, இரவு இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

திருபுவனை பகுதியில் சென்றபோது, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த காரின் டயா் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய காா், சுரேஷ்குமாா், கருணாகரன் வந்த பைக் மீது மோதியது. இதில், இவா்கள் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா்.

அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த சுரேஷ்குமாா், வியாழக்கிழமை உயிரிழந்தாா். கருணாகரனுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், மேற்கு போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT