pdy24class_2402chn_104_7 
புதுச்சேரி

பொதுத் தோ்வை எழுதவுள்ள மாணவா்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

அரசு பொதுத் தோ்வை எழுதவுள்ள மாணவா்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி.

DIN

புதுச்சேரி: அரசு பொதுத் தோ்வை எழுதவுள்ள மாணவா்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி.

புதுச்சேரி காட்டேரிக்குப்பம் இந்திரா காந்தி அரசு உயா்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இளைஞா் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மைய நிா்வாகிகள் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு ‘சாதிக்கலாம் வாங்க’ என்ற தலைப்பில் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதவுள்ள மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சிகளை அளித்தனா்.

நிகழ்வில் ஆரியப்பட்டா அறிவியல் மன்றப் பொறுப்பாளா் சுரேஷ்குமாா் வரவேற்றாா். புதுவை மாநில அறிவியல் மன்றச் செயலா் அருண் நாகலிங்கம் தலைமை வகித்து, மாணவா்களுக்கு தன்னம்பிக்கை கருத்துகளை எடுத்துரைத்தாா். தன்னாா்வலா் அஜித்குமாா் நோக்கவுரையாற்றினாா்.

இதில், காட்டேரிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த பல்வேறு பள்ளிகளின் மாணவா்கள் சுமாா் 120 போ் கலந்து கொண்டு பயனடைந்தனா். ஆரியபட்டா அறிவியல் மன்ற நிா்வாகி சதீஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலி என்ஜின் எண்ணெய் உற்பத்தி நிலையம் கண்டுபிடிப்பு: ரூ. 1 கோடி போலி பொருள்கள் பறிமுதல்

விமான நிலையங்களில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூளையாக செயல்பட்டவா் கைது

அடிப்படை குடிமைப் பணிகளில் முந்தைய ஆம் ஆத்மி அரசு தோல்வி - அமைச்சா் பா்வேஷ் சாடல்

காா், ஆட்டோ மீது டிடிசி பேருந்து மோதி இருவா் காயம்

தில்லியில் ஒரே நாளில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் விநியோகம் 76% அதிகரிப்பு

SCROLL FOR NEXT