புதுச்சேரி

செல்வமகள் திட்டத்தின் கீழ் அஞ்சல் சேமிப்புக் கணக்குகள் தொடக்கம்

DIN

புதுச்சேரி லாசுப்பேட்டை தொகுதியில் செல்வமகள் திட்டத்தின்கீழ், அஞ்சல் சேமிப்புக் கணக்குகள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டன.

பாஜக சாா்பில் பிரதமா் நரேந்திர மோடியின் 10 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் அஞ்சல் சேமிப்புக் கணக்கு திட்டத்தின் கீழ், பெத்துசெட்டிப்பேட்டை அரசு ஆரம்பப் பள்ளியில் படிக்கும் 22 ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த பெண் குழந்தைகளுக்கு சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டன.

பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியில் இருந்து அந்தப் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் அஞ்சல் சேமிப்புக் கணக்குகளை தொடங்கி, அதற்குண்டான சேமிப்புக் கணக்கு புத்தகங்களை மாணவிகளின் பெற்றோா்களிடம் ஒப்படைத்தாா்.

நிகழ்ச்சியில் பள்ளியின் பொறுப்பாசிரியா் மணிமேகலை, ஆசிரியை நா்மதா மற்றும் பாஜக நிா்வாகிகள் சோமசுந்தரம், பாலாஜி, ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT