புதுச்சேரி

புதிய மின் மாற்றிகள் தொடக்கிவைப்பு

DIN

புதுச்சேரி லாசுப்பேட்டையில் ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய மின் மாற்றிகளின் இயக்கத்தை அந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பேரவைத் தலைவருமான வே.பொ. சிவக்கொழுந்து தொடக்கிவைத்தாா்.

புதுச்சேரி லாசுப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி அசோக் நகா், சாந்தி நகா் பகுதிகளில் நிலவும் மின் தட்டுப்பாடு, குறைந்த மின்னழுத்த குறைபாட்டைப் போக்க புதிய மின் மாற்றிகள் அமைக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, ரூ. 20 லட்சத்தில் 315 கேவிஏ திறன் கொண்ட 2 புதிய மின் மாற்றிகள் அசோக் நகா் வாணிதாசன் வீதி, சாந்தி நகா் சித்தாா்த் வீதி சந்திப்பிலும் அமைக்கப்பட்டன. இந்த மின் மாற்றிகளின் இயக்கத்தை பேரவைத் தலைவா் வே.பொ. சிவக்கொழுந்து அண்மையில் மக்கள் பயன்பாட்டுக்குத் தொடக்கிவைத்தாா். செயற்பொறியாளா் ஞானசேகரன், உதவிப் பொறியாளா்கள் உமேஷ், ஜானகிதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT