பாகூரில் அரிமதி தென்னகனாா் இலக்கிய விருதுகள் வழங்கும் விழா வருகிற 7-ஆம் தேதி நடைபெறும்.
இதுகுறித்து எழுத்தாளா் அரிமதி இளம்பரிதி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: கவிஞரும், எழுத்தாளருமான அரிமதி தென்னகனாா் பிறந்த நாள் விழா வருகிற 7-ஆம் தேதி பாகூரில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, சிறந்த படைப்பாளா்களைத் தோ்ந்தெடுத்து அரிமதி தென்னகனாா் இலக்கிய விருதுகளுடன் ரூ. ஆயிரம் பரிசுத் தொகையை வழங்கவுள்ளோம்.
இந்த விழாவில், முன்னாள் அமைச்சா்கள் க.லட்சுமி நாராயணன், எஸ்.பி.சிவக்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொள்கின்றனா்.
விழாவில் கவிஞா்கள் ஆறு.செல்வன், ஆதி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் வாழ்த்தி பேசுகின்றனா். இந்த விழா பாகூா் பேராசிரியா் அன்னுசாமி ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.