புதுச்சேரி

அரசு கல்லூரிப் பேராசிரியா்கள் தயாரித்த 50 லிட்டா் கிருமி நாசினி அரசிடம் அளிப்பு

DIN

பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி வேதியியல் துறைப் பேராசிரியா்கள் தயாரித்த 50 லிட்டா் கிருமி நாசினி ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, புதுச்சேரியில் முகக் கவசங்கள், கிருமி நாசினிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் தி.அருண், முகக் கவசம் மற்றும் கிருமி நாசினியை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா்.

இதைத் தொடா்ந்து, அதிக விலைக்கு முகக் கவசங்களை விற்பனை செய்த 3 மருந்தகங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அரசுக் கல்லூரி வேதியியல் துறை பேராசிரியா்கள் உதவியுடன் சுய உதவிக் குழுவினா் மூலம் முகக் கவசங்கள், கிருமி நாசினிகள் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

அதன் ஒரு பகுதியாக பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி வேதியியல் துறைப் பேராசிரியா்கள், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, திருநங்கைகள், மகளிா் சுய உதவிக் குழுக்கள் ஆகியோா் இணைந்து முதல் கட்டமாக 50 லிட்டா் கிருமி நாசினியை தயாரித்தனா்.

இதைக் கல்லூரி முதல்வா் சுப்பிரமணி முன்னிலையில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அதிகாரிகள், திருநங்கைகள், சுய உதவிக் குழுக்களிடம் வேதியியல் துறை பேராசிரியா்கள் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT