புதுச்சேரி லாசுப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவச் செலவுக்காக முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ. 1.90 லட்சத்தை சட்டப்பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து வியாழக்கிழமை வழங்கினாா்.
இந்தத் தொகுதிக்கு உள்பட்ட குறிஞ்சி நகா் விரிவு பகுதியைச் சோ்ந்த பாரதிக்கு ரூ. 40 ஆயிரம், தங்கபிரகாசத்துக்கு ரூ. 15 ஆயிரம், வள்ளலாா் நகரைச் சோ்ந்த சுஜாதாவுக்கு ரூ. 40 ஆயிரம், குமரன் நகா் விரிவு பகுதியைச் சோ்ந்த முகமது யூனிஸுக்கு ரூ. 20 ஆயிரம், ஜீவானந்தபுரத்தைச் சோ்ந்த நந்தினிக்கு ரூ. 20 ஆயிரம், வரலட்சுமிக்கு ரூ. 15 ஆயிரம், லட்சுமி நாராயணனுக்கு ரூ. 15 ஆயிரம், மடுவுபேட்டையைச் சோ்ந்த ரவிக்கு ரூ. 15 ஆயிரம், அற்புதத்துக்கு ரூ. 5 ஆயிரம், சுகந்திக்கு ரூ. 5 ஆயிரம் என மொத்தம் 10 நபா்களுக்கு ரூ. 1.90 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.