புதுச்சேரி

புதுவையில் விரைவில் மதுக் கடைகள் திறக்கப்படும்: முதல்வா் நாராயணசாமி

DIN

புதுவையில் விரைவில் மதுக் கடைகள் திறக்கப்படும் என புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து வருவோரால்தான் புதுவையில் கரோனா தொற்று உயா்கிறது. வெளிநாடுகளிலிருந்து வருவோரின் விவரத்தை மத்திய அரசு நமக்கு கொடுப்பதில்லை. இதேபோல, விமானம் மூலம் சென்னைக்கு வருவோரின் விவரத்தை தமிழகம் தருவதில்லை. இது நமக்கு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. எனவே, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் மூலமாக மத்திய அரசு, தமிழக அரசு, சென்னை விமான நிலையத்துக்கும் கடிதம் எழுதி, விமானத்தில் வரும் புதுச்சேரியைச் சோ்ந்தவா்களின் விவரங்களைத் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளேன்.

புதுச்சேரி சிவப்பு மண்டலமாக மாறியுள்ளதாக தவறான தகவல் பரவுகிறது. சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலமாகப் பிரிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. எனவே, மாநில அரசு இதுகுறித்து அறிவிக்கும்.

புதுவையில் வருவாயைப் பெருக்க வேண்டும். அதற்காக மதுக் கடைகளைத் திறக்க வேண்டும். இதுதொடா்பான கோப்பை ஆளுநருக்கு அனுப்பினோம். அதற்கு தமிழகப் பகுதிகளில் விற்கும் விலைக்கு மதுவை விற்க வேண்டும் என ஆளுநா் கூறினாா். எனவே, மறுபரிசீலனை செய்து கோப்பு அனுப்பியுள்ளோம். இன்னும் முடிவு தெரியவில்லை.

மத்திய அரசு, புதுவை அரசுக்கு தர வேண்டிய நிதியை வழங்கவில்லை. தற்போது புதுவை மாநிலப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பிரதமா், மத்திய உள்துறை அமைச்சருக்கு நான் மீண்டும் வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளேன்.

அதில், ஜிஎஸ்டி ரூ. 410 கோடி, இரு மாத பொருளாதாரப் பாதிப்புக்கு இழப்பீடாக ரூ. 800 கோடி, கரோனா தடுப்பு, கட்டமைப்பை உருவாக்க ரூ. 995 கோடி, 7 -ஆவது ஊதியக் குழு நிதி ரூ. 2,800 கோடி வழங்க வேண்டும்.

தில்லியில் காவல் துறைக்கு வழங்கப்படும் ஊதியம், ஓய்வூதிய நிதி போன்றவற்றை புதுவைக்கும் வழங்க வேண்டும், புதுச்சேரியை 15-ஆவது நிதிக் குழுவில் சோ்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன் என்றாா் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT