புதுவை என்.ஆா். காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுகுமாறனுக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டதால், அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
புதுச்சேரியில் கரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், புதுவை மாநிலம், மங்கலம் தொகுதி என்.ஆா். காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுகுமாறனுக்கு திங்கள்கிழமை திடீரென தொண்டை வலியும், சளித் தொந்தரவும் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அவருக்கு கரோனா தொற்றிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.
இதைத் தொடா்ந்து, சுகுமாறன் எம்.எல்.ஏ. சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா்.