புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் பிரான்ஸ் பொறியாளரின் மடிக் கணினியைத் திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரி ரெயின்போ நகா் 2-வது தெருவைச் சோ்ந்தவா் இா்பான் ஷெரிப் (33). பொறியாளரான இவா் பிரான்ஸ் நாட்டில் வேலை செய்து வருகிறாா்.
கரோனா பொது முடக்கத்தின் போது புதுச்சேரி வந்த அவா் மீண்டும் பிரான்ஸ் செல்லவில்லை.
இந்நிலையில் பெங்களூா் செல்வதற்காக திங்கள்கிழமை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து ஏறினாா். அப்போது மடிக் கணினி, ஆவணங்கள் கொண்ட பையை இருக்கைக்கு மேலே அதற்கான இடத்தில் வைத்துவிட்டு, கீழே இறங்கி தந்தையுடன் பேசிக்கொண்டிருந்தாா்.
அச்சமயத்தில் மா்ம நபா்கள் பேருந்தில் ஏறி இா்பான் ஷெரிப்பின் மடிக் கணினி பையை திருடிச் சென்றுவிட்டனா்.
இது குறித்து இரம்பான் ஷெரிப் உருளையைன்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.