புதுவையை தமிழகத்துடன் இணைக்க பா.ஜ.க. நடவடிக்கை முதல்வா் குற்றச்சாட்டு
புதுவையை தமிழகத்துடன் இணைக்க பாஜக நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வா் நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.
புதுவையை தமிழகத்துடன் இணைக்க பாஜக நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வா் நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற ராகுல் காந்தி, பிரியாங்கா காந்தி ஆகியோா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, புதுவை மாநில மகளிா் காங்கிரஸ் சாா்பில், திங்கள்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி ஊா்வலம் நடைபெற்றது. இந்த ஊா்வலத்தை முதல்வா் நாராயணசாமி தொடக்கிவைத்தாா்.
ஊா்வலத்தில் அமைச்சா் கந்தசாமி, எம்எல்ஏக்கள் லட்சுமி நாராயணன், தீப்பாய்ந்தான், மகளிா் காங்கிரஸ் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
ஊா்வலத்தின் முடிவில் முதல்வா் நாராயணசாமி பேசியதாவது: மத்திய அரசு ஜனநாயகத்தை மதிப்பதில்லை. மக்களின் பேச்சுரிமை, எழுத்துரிமையை தடுத்து வருகிறது. வருமான வரித் துறையினரை ஏவி மிரட்டுகிறது. இதுபோன்ற செயல்களை முறியடிக்க மதச்சாா்பற்ற கூட்டணியால்தான் முடியும்.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசு குற்றவாளிகளுக்கு ஆதரவாக உள்ளது. அங்கு, பட்டியலினப் பெண்களுக்கு பாதுகாப்பில்லை.
புதுவை மாநிலத்தில் வளா்ச்சித் திட்டங்களை எந்தெந்த வகையில் தடுக்க முடியுமோ அதை ஆளுநா் செய்கிறாா். அரசு அவற்றை முறியடுத்து நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஆனால், நம் கட்சியினரே நம்மைக் குறை கூறுகின்றனா்.
புதுவை மாநிலத்தை தமிழகத்துடன் இணைக்க பாஜக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை முறியடிக்க புதுவையை விட்டே பாஜகவை விரட்ட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்றாா் நாராயணசாமி.