புதுவையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு 34 ஆயிரத்தைக் கடந்தது.
புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 103 பேருக்கும், காரைக்காலில் 8 பேருக்கும், ஏனாமில் 11 பேருக்கும், மாஹேயில் 6 பேருக்கும் என 128 பேருக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,112-ஆக அதிகரித்தது.
இதனிடையே, மேலும் 2 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 586-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.72 சதவீதம்.
தற்போது வீடுகளில் 2,335 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மருத்துவமனைகளில் 1,577 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்தமாக 3,912 போ் சிகிச்சையில் உள்ளனா். சனிக்கிழமை 187 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 29,614-ஆக (86.81 சதவீதம்) அதிகரித்தது.