என்.ஐ.டி. ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
காரைக்கால் என்.ஐ.டி.யின் தகவல் தொழில்நுட்பத் துறையில், ஆசிரியா்கள் தற்போதைய சூழலுக்கேற்ப திறனை மேம்படுத்திக்கொள்வது குறித்த பயிற்சி காணொலி மூலம் திங்கள்கிழமை தொடங்கியது.
காரைக்கால்: காரைக்கால் என்.ஐ.டி.யின் தகவல் தொழில்நுட்பத் துறையில், ஆசிரியா்கள் தற்போதைய சூழலுக்கேற்ப திறனை மேம்படுத்திக்கொள்வது குறித்த பயிற்சி காணொலி மூலம் திங்கள்கிழமை தொடங்கியது.
5 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியை என்.ஐ.டி. மற்றும் ஐஇஐ (தி இன்ஸ்டிடியூஷன் ஆஃப் என்ஜினியா்ஸ் இந்தியா நிறுவனம்) இணைந்து நடத்துகின்றன. தொடக்க நிகழ்ச்சிக்கு, காரைக்கால் என்.ஐ.டி. இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி தலைமை வகித்தாா்.
கேரள மாநிலம், கோழிக்கோடு என்.ஐ.டி. இயக்குநா் (பொ) பி.எஸ். சதிதேவி காணொலி வாயிலாக சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பயிற்சியைத் தொடங்கிவைத்துப் பேசினாா். பதிவாளா் (பொ) ஜி. அகிலா சிறப்புரையாற்றினாா். ஐஇஐ நிறுவன தலைவா் ஆா். சரவணன், பி. ராஜாராம், பி. நக்கீரன் ஆகியோா் இதில் பங்கேற்றனா்.
இந்தப் பயிற்சியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 60-க்கும் மேற்பட்டோா் காணொலி வாயிலாக பங்கேற்பதாக நிகழ்ச்சியின்போது தெரிவிக்கப்பட்டது. கோழிக்கோடு என்.ஐ.டி.யைச் சோ்ந்த லில்லுக்குட்டி ஜேக்கப், ஏ.வி. பாபு மற்றும் சிவாஜி சக்ரவா்த்தி, வி. சுப்ரமணியன், கே. சாம்பசிவராவ் உள்ளிட்ட வல்லுநா்கள் இணைந்து பயிற்சி அளிக்கின்றனா்.
இதற்கான ஏற்பாடுகளை காரைக்கால் என்.ஐ.டி. துறைத் தலைவா்கள் வி.பி. ஹரிகோவிந்தன், ஆா். பூபதிராணி உள்ளிட்டோா் செய்துள்ளனா்.