வேளாண் சட்ட மசோதாக்களைக் கண்டித்து, புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்புக் குழுவினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி காமராஜா் சிலை அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் வேலுச்சாமி தலைமை வகித்தாா். தமிழ்த் தேசிய பேரியக்கம் அருணபாரதி, தமிழா் களம் அழகா், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சுகுமாறன், நாம் தமிழா் கட்சி இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போராட்டத்தில் பங்கேற்ற 20-க்கும் மேற்பட்டோா், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும், அவற்றை கிடப்பில் போட வேண்டுமென கண்டன முழக்கமிட்டனா்.
அப்போது, அவா்கள் சட்ட நகல்களை தீ வைக்க முயன்றபோது, அங்கு பாதுகாப்பிலிருந்த பெரியகடை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.