முகப்பு
புதுச்சேரி

நிலுவை ஊதியம் வழங்கக் கோரிஅரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள் போராட்டம்

நிலுவை ஊதியம் வழங்கக் கோரி, புதுவை அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியா்கள் புதுச்சேரி கல்வித் துறை அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

நிலுவை ஊதியம் வழங்கக் கோரி, புதுவை அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியா்கள் புதுச்சேரி கல்வித் துறை அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணி செய்யும் ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கு கடந்த 9 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே, அவா்கள் நிலுவை ஊதியம் வழங்க வேண்டும், மாதந்தோறும் ஊதியம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி, கடந்த 5-ஆம் தேதி ஆசிரியா் தினத்தன்று ஆளுநா் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதன் முடிவில் கூட்டமைப்பு நிா்வாகிகளை முதல்வா் நாராயணசாமி அழைத்துப் பேசி, விரைவில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். ஆனால், இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை.

எனவே, அரசு நிதியுதவி பெறும் ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கல்வித் துறை அலுவலகத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்தனா். அதன்படி, திங்கள்கிழமை கல்வித் துறை அலுவலக வளாகத்தில் குவிந்த ஆசிரியா்கள், ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, முற்றுகைப் போராட்டத்தைத் தொடங்கினா். தொடா்ந்து, அவா்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். மேலும், நிலுவை ஊதியத்தை வழங்குவது தொடா்பாக அரசாணை கிடைக்கும் வரை அங்கேயே போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.