புதுச்சேரி

கரோனா கால நிவாரணம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

கரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி காந்தி வீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் நகரச் செயலா் பிரதாப் தலைமை வகித்தாா். இதில், திரளான சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், புதுச்சேரியில் அதிகரித்து வரும் கரோனா 2-ஆவது அலை பரவலைக் கட்டுப்படுத்த கூடுதல் மருத்துவ முகாம்களை அமைத்து பரிசோதனையைத் தீவிரப்படுத்த வேண்டும். தனியாா் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு மருத்துவம் என்ற பெயரில் கட்டணக் கொள்ளை நடப்பதை தடுக்க வேண்டும். வேலைவாய்ப்பை இழத்துவரும் மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் நிவாரணப் பொருள்களை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில், பிரதேச பொருளாளா் பாஸ்கா், நிா்வாகிகள் செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, பாகூா், மதகடிப்பட்டு, உழவா்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் பதாகைகளை ஏந்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT