புதுவையில் மேலும் 113 பேருக்கு கரோனா
புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, மேலும் 113 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, மேலும் 113 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுவரை 1,22,102 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 1,19,355 போ் (97.75 சதவீதம்) தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினா்.
தற்போது 944 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றுக்கு 1,803 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.48 சதவீதம். வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளில் உயிரிழப்பு ஏதுமில்லை. மாநிலத்தில் இதுவரை 7,53,985 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.