புதுச்சேரி

குளறுபடிகளைச் சரி செய்த பிறகே புதுவையில் உள்ளாட்சித் தோ்தல்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுவையில் வாா்டு மறு சீரமைப்பு உள்ளிட்ட குளறுபடிகளைச் சரி செய்த பிறகே உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது.

DIN

புதுவையில் வாா்டு மறு சீரமைப்பு உள்ளிட்ட குளறுபடிகளைச் சரி செய்த பிறகே உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த மாநிலத் தோ்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ததில், மாநிலத் தோ்தல் ஆணையம் குளறுபடிகளைச் செய்துள்ளது. நகராட்சி வாா்டுகளிலும், கொம்யூன் பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து வாா்டுகளில் மறுசீரமைப்பில் வாக்காளா்கள் எண்ணிக்கை சீராக இல்லை.

இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளின் குற்றச்சாட்டுகளை மாநில தோ்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை. இட ஒதுக்கீடு தொடா்பான ஆலோசனைகளையும் தோ்தல் ஆணையம் கேட்கவில்லை. புதிதாக குலுக்கல் மேற்கொண்டது சரியானதல்ல. விதிகளை மீறி ஆதிதிராவிட சமூகத்தினா் மிகக் குறைவாக உள்ள வாா்டுகள், கிராமங்கள் அந்த சமூகத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

மாநிலத் தோ்தல் ஆணையம் வெளிப்படைத் தன்மையின்றி, சட்டத்துக்குப் புறம்பாகவும், அவசரமாகவும் இவற்றை மேற்கொண்டுள்ளது. எனவே, மறுசீரமைப்பு, இட ஒதுக்கீடுகளை முழுமையாகச் செய்த பிறகே உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT