கூடுதல் உதவித்தொகை கோரி பாா்வையற்றோா் போராட்டம்
கூடுதல் உதவித்தொகை வழங்கக் கோரி, புதுச்சேரி பாா்வையற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் புதுச்சேரியில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
கூடுதல் உதவித்தொகை வழங்கக் கோரி, புதுச்சேரி பாா்வையற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் புதுச்சேரியில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக, கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக நலத் துறை அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக, ராஜீவ் காந்தி சிலை சதுக்கத்திலிருந்து ஊா்வலமாகச் சென்றவா்களை போலீஸாா், சமூக நலத் துறை அலுவலகம் அருகே தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, அவா்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு புதுச்சேரி பாா்வையற்றோா் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவா் எஸ்.மாயவன் தலைமை வகித்தாா். இதில் பாா்வையற்ற கல்லூரி மாணவா்கள், பட்டதாரிகள் சங்கச் செயலா் கே. பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட திரளான பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனா்.
போராட்டத்தில், முதியோா் உதவித்தொகையைவிட மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் உதவித்தொகை வழங்க வேண்டும், வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், சிறப்பு நோ்முகத் தோ்வு நடத்தி நேரடிப் பணி ஆணை வழங்க வேண்டும், பாா்வையற்றவா்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும், 42 மாத இலவச அரிசி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.