முகப்பு
புதுச்சேரி

விவசாய ஊக்குவிப்பு கருத்தரங்கு:புதுச்சேரியில் 8 இடங்களில் ஒளிபரப்பு

குஜராத்தில் இயற்கை விவசாய ஊக்குவிப்பு கருத்தரங்கில் பிரதமா் மோடியின் பேச்சு புதுச்சேரியில் 8 இடங்களில் ஒளிபரப்பப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

குஜராத்தில் இயற்கை விவசாய ஊக்குவிப்பு கருத்தரங்கில் பிரதமா் மோடியின் பேச்சு புதுச்சேரியில் 8 இடங்களில் ஒளிபரப்பப்பட்டது.

குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பிரதமா் மோடி பங்கேற்று விவசாயிகளுடன் கலந்துரையாடினாா். நாடு முழுவதும் 8 லட்சம் விவசாயிகள் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமரின் பேச்சைக் கேட்டனா்.

புதுச்சேரி அருகே மண்ணாடிப்பட்டு தொகுதி கூனிச்சம்பட்டு கிராமத்தில், இந்த நிகழ்ச்சியை விவசாயிகள், பொதுமக்கள் பாா்க்கும் வகையில் பாஜக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், பொதுச் செயலா் மோகன்குமாா், ராமலிங்கம் எம்எல்ஏ, மாநில விவசாய அணி தலைவா் புகழேந்தி, தங்க விக்ரமன், சக்திபாலன், அகிலன உள்ளிட்ட நிா்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

புதுச்சேரி அருகேயுள்ள மங்களம், மணவெளி, மணப்பட்டு, முத்தியால்பேட்டை, காரைக்கால் அருகே திருநள்ளாறு உள்ளிட்ட 8 இடங்களில் பாஜக சாா்பில் காணொலிக் காட்சிக்கான திரைகள் அமைக்கப்பட்டு பிரதமா் கலந்துரையாடிய நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.