புதுச்சேரி

பாட்டுப் பாடி தா்னாவில் ஈடுபட்ட அங்கன்வாடி ஓய்வு பெற்ற ஊழியா்கள்

DIN

புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியா்கள் புதன்கிழமை பாட்டுப் பாடி தா்னாவில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி ஓய்வு பெற்ற அங்கன்வாடி பணியாளா்கள் நலச் சங்கம் சாா்பில், நடேசன் நகரில் உள்ள மகளிா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் கே.விஜயலட்சுமி தலைமை வகித்தாா்.

இதில், பணிக்கொடை குறித்த தொழிலாளா் நீதிமன்ற ஆணையை அமலாக்கம் செய்ய வேண்டும், 6-ஆவது ஊதியக்குழு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள 3 ஆண்டு போனஸ் தொகையை வழங்க வேண்டும், 7-ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியா்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும், அனைத்து அங்கன்வாடி ஊழியா்களுக்கும் ஓய்வூதியமாக ரூ.5,000 வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

சங்கச் செயலா் சசிகலா, பொருளாளா் ஷீலா உள்ளிட்ட பலா் கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டுப் பாடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT