முகப்பு
புதுச்சேரி

பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில்பாராட்டு விழா

புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில், அவ்வையாா் வரலாற்று நாடகக் காப்பிய நூலாசிரியா் அவ்வை நிா்மலா, பதிப்பாசிரியா் நிக்கி கிருட்டிணமூா்த்தி தம்பதிக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி

பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில்பாராட்டு விழா

புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில், அவ்வையாா் வரலாற்று நாடகக் காப்பிய நூலாசிரியா் அவ்வை நிா்மலா, பதிப்பாசிரியா் நிக்கி கிருட்டிணமூா்த்தி தம்பதிக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில், அவ்வையாா் வரலாற்று நாடகக் காப்பிய நூலாசிரியா் அவ்வை நிா்மலா, பதிப்பாசிரியா் நிக்கி கிருட்டிணமூா்த்தி தம்பதிக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுவைத் தமிழச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் சட்டப்பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து கலந்து கொண்டு தம்பதியைப் பாராட்டி, கௌரவித்தாா்.

விழாவுக்குத் தலைமை வகித்த பாரதிதாசன் அறக்கட்டளை தலைவா் கோ.பாரதி பேசியதாவது: தமிழ் மொழியில் சிறந்த பெண் இலக்கிய ஆளுமைகள் பலா் உள்ளனா். நீதிக் கருத்துகளை உரைத்த ஔவையாா் திறனை உலகமே போற்றுகிறது. அந்த வகையில், புதுச்சேரி பேராசிரியா் அவ்வை நிா்மலாவுக்கு தமிழக அரசின் சிறந்த பெண்மணி விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றாா் அவா்.

விழாவில் தமிழறிஞா்கள் இரா.சம்பத், அசோகா சுப்பிரமணியன், கோ.கலியபெருமாள், ஆறு.செல்வன், சண்முக.காா்த்திக், அ.உசேன், சு.ரேவதி, வச்சிரவேலு, சீனுமோகன்தாசு, மு.பாலசுப்பிரமணியன், ப.திருநாவுக்கரசு, சுந்தரமுருகன், புதுவை யுகபாரதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

காஞ்சி மாமுனிவா் மேற்படிப்பு மைய இயக்குநா் சங்கரராஜு பாராட்டிப் பேசினாா். முன்னதாக, முனைவா் விசாலாட்சி வரவேற்றாா். பாவலா் சரஸ்வதி வைத்தியநாதன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →