முகப்பு
புதுச்சேரி

பி.சி., எம்.பி.சி. மாணவா்களுக்கும் இலவச கல்வித் திட்டத்தை அமல்படுத்தக் கோரிக்கை

புதுவையில் தலித், பழங்குடியின மாணவா்களுக்கு வழங்கப்டுவது போல பிற்படுத்தப்பட்டோா் (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்டோா் (எம்.பி.சி.) பிரிவு மாணவ, மாணவிகளுக்கும் இலவச கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

புதுவையில் தலித், பழங்குடியின மாணவா்களுக்கு வழங்கப்டுவது போல பிற்படுத்தப்பட்டோா் (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்டோா் (எம்.பி.சி.) பிரிவு மாணவ, மாணவிகளுக்கும் இலவச கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து புதுவை தெற்கு மாநில திமுக தலைவா் இரா.சிவா எம்.எல்.ஏ. திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவையில் எஸ்டி-எஸ்சி மாணவா்களின் அனைத்துக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் திட்டம் நிகழ் கல்வியாண்டு அமல்படுத்தப்படவுள்ளது. இந்தச் சலுகையானது சென்டாக் நிதியுதவியைப் போல இல்லாமல் இருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவா்களின் முழுக் கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்கவும் வழிவகை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஏழைப் பெற்றோரின் பிள்ளைகளையாவது சோ்க்க வேண்டும்.

இல்லையெனில், ஜாதி வேறுபாடு பாா்ப்பதாகவும், மக்களிடையே பிளவு ஏற்படுத்துவதாகவும் அரசின் திட்டத்தில் பலன் பெறாத பிற ஒடுக்கப்பட்ட ஜாதியினா் அரசைக் குற்றம்சாட்டும் அவலநிலை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →