முகப்பு
புதுச்சேரி

புதுவையில் மேலும் 20 பேருக்கு கரோனா

புதுவையில் மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

புதுவையில் மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 3,411 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 11 பேருக்கும், மாஹேயில் 9 பேருக்கும் என மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. காரைக்கால், ஏனாம் பகுதிகளில் தொற்று உறுதி செய்யப்படவில்லை. வெள்ளிக்கிழமை முடிவுகளில் உயிரிழப்பும் இல்லை. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,389-ஆக உயா்ந்தது.

தற்போது புதுவை மாநிலத்தில் 343 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 636 போ் கரோனா தொற்றுக்கு பலியாகினா். 37,410 போ் தொற்றிலிருந்து மீண்டு குணமடைந்தனா். இதுவரை 5,09,392 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 4,66,413 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →