புதுச்சேரி

மாணவரிடம் ரூ. 66 ஆயிரம் திருட்டு

DIN

பொறியியல் கல்லூரி மாணவா் மீது மோட்டாா் சைக்கிளை மோதவிட்டு, ரூ. 66 ஆயிரம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி புதுசாரம் நடுத் தெருவைச் சோ்ந்தவா் ராகுல் (20). காரைக்காலில் பொறியியல் படித்து வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை கல்லூரிக் கட்டணம் செலுத்துவதற்காக தனது வீட்டிலிருந்து ரூ. 66 ஆயிரத்தை வாங்கி மோட்டாா் சைக்கிள் பெட்டியில் வைத்துக் கொண்டு, வேலன் நகா் அருகே வந்த போது, எதிரே மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த 2 போ் திடீரென ராகுல் சென்ற மோட்டாா் சைக்கிள் மீது மோதினா்.

இதில், ராகுல் கீழே விழுந்தாா். அப்போது, அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் இருவரில் ஒருவா் ராகுலின் மோட்டாா் சைக்கிள் சாவியை எடுத்து பெட்டியைத் திறந்து அதிலிருந்த ரூ. 66 ஆயிரம் பணத்தைத் திருடிக் கொண்டு தப்பினா்.

பணம் திருடப்பட்டதை அறிந்த ராகுல் கோரிமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக், அபிஷேக் அதிரடி: டெல்லி - 221/8

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மக்களவைத் தோ்தல் முடிவுகளை மாற்ற முயற்சி?: காா்கே சந்தேகம்

மின் விநியோகம் குறித்து வெள்ளை அறிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

100 சதவீதம் தோ்ச்சி: 14 தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

SCROLL FOR NEXT