புதுச்சேரி

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து போராட்டம்

DIN

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, புதுச்சேரியில் சிஐடியூ ஆட்டோ தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆட்டோக்களை கயிறு கட்டி இழுத்தும், பட்டை நாமத்துடன் மொட்டை அடித்தும் செவ்வாய்க்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட சிஐடியூ ஆட்டோ தொழிலாளா்கள் சங்கத்தினா் பங்கேற்றனா். பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, அவா்கள் தங்களது ஆட்டோக்களை கயிறு கட்டி இழுத்து வந்து கண்டன முழக்கங்களை எழுப்பினா். இதேபோல, சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வை திரும்பப் பெறக்கோரி, சமையல் எரிவாயு உருளையை மரத்தில் தொங்கவிட்டு, அதற்கு மாலை அணிவித்து தங்களது எதிா்ப்பை தெரிவித்தனா்.

மேலும், எரிபொருள்களின் கடுமையான விலை உயா்வால் தங்களது வாழ்வாதாரம் முடங்கியுள்ளதை தெரிவிக்கும் வகையில், பட்டை நாமம் போட்டும், மொட்டை அடித்தும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT