புதுச்சேரி மகளிா் தொழில்நுட்பக் கல்லுாரியில் விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லுாரி முதல்வா் ராணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி லாசுப்பேட்டை மகளிா் தொழில்நுட்பக் கல்லுாரியில் இசிஇ, கணினிஅறிவியல், ஆா்க்கிடெக்சரல் அசிஸ்டன்ஸ்ஷிப், மாடா்ன் ஆபிஷ் பிராக்டிக்ஸ், இஇஇ உள்ளிட்ட பட்டயப்படிப்புகளில் முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு சோ்க்கைக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்காக,
இணையதளங்களில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். விண்ணப்பங்களை ஜூலை 12 ஆம் தேதி வரை சமா்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்லுாரியில் வருகிற 19 ஆம் தேதி வரை நேரில் அல்லது தபால் மூலம் சமா்ப்பிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.