பெண்ணிடம் தங்கச் சங்கிலிபறிப்பு: இளைஞா் கைது
புதுச்சேரியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி ரெட்டியாா்பாளையம், பவழ நகா், புதுத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி ராஜவேணி (69). கடந்த மாதம் 29-ஆம் தேதி இரவு ராஜவேணியின் வீட்டினுள் புகுந்த மா்ம நபா், அவா் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனா்.
அதில், ராஜவேணியின் வீட்டுக்கு வா்ணம் பூசும் வேலைக்குச் சென்ற வாழைக்குளம் பகுதியைச் சோ்ந்த குமாா் (எ) செல்வகுமாா் (32) நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, தனது வீட்டில் பதுங்கியிருந்த குமாரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்ததுடன், அவரிடமிருந்து 4 பவுன் தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்தனா்.