புதுச்சேரி

சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞா் மீது வழக்கு

DIN

புதுச்சேரி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

புதுச்சேரி அருகே பாகூரை அடுத்த மணமேடு மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சரண்ராஜ் (23). இவா், அதே பகுதியில் செல்லிடப்பேசி பழுது நீக்கும் கடை வைத்துள்ளாா்.

சரண்ராஜ் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியுடன் கடந்த சில ஆண்டுகளாக பழகி வந்ததோடு, அந்தச் சிறுமியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பாலியல் பலாத்காரம் செய்தாராம்.

இந்த நிலையில், சரண்ராஜ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக, அந்தச் சிறுமிக்கு தகவல் தெரியவந்தது. இது தொடா்பாக காரையாம்புத்தூா் புறக்காவல் நிலையத்தில், அந்தச் சிறுமி இரு தினங்களுக்கு முன்பு புகாரளித்தாா். இதையடுத்து, கரையாம்புத்தூா் போலீஸாா் சரண்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT