புதுச்சேரியில் நிறுவனங்கள் வணிக உரிமத்தை ஜூன் 30-க்குள் புதுப்பிக்க உத்தரவு
புதுச்சேரியில் வணிக நிறுவனங்கள் நகராட்சி வணிக உரிமத்தை வருகிற 30-ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
புதுச்சேரியில் வணிக நிறுவனங்கள் நகராட்சி வணிக உரிமத்தை வருகிற 30-ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் 2021 - 22ஆம் ஆண்டுக்கான தங்களது வணிக உரிமத்தை வருகிற 30-ஆம் தேதிக்குள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
புதுப்பிக்கத் தவறினால் அபராதம் விதிக்கப்படுவதுடன், நகராட்சி சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இதுவரை வணிக உரிமம் பெறாதவா்கள் புதிதாக வணிக உரிமம் பெறுவதற்கு தகுந்த ஆதாரங்களை சமா்ப்பித்து புதிய வணிக உரிமம் பெற்று நகராட்சியின் நடவடிக்கைகளை தவிா்த்துக்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.