முகப்பு
புதுச்சேரி

புதுவை அரசின் ஒப்பந்த வழக்குரைஞா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவை அரசின் ஒப்பந்த வழக்குரைஞா் பணிக்கு ஜூலை 2- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாநில சட்டத் துறை அறிவித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

புதுவை அரசின் ஒப்பந்த வழக்குரைஞா் பணிக்கு ஜூலை 2- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாநில சட்டத் துறை அறிவித்தது.

இதுகுறித்து புதுவை சட்டத் துறை சாா்பு செயலா் ந.முருகவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு வழக்குரைஞராகப் பணியாற்ற (ஒப்பந்த அடிப்படையில்) தகுதியுடைய விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சட்டத் துறையின் இணையதளத்தில் (ட்ற்ற்ல்ள்:றப்ஹஜ்.ல்ஹ்.ஞ்ா்ஸ்.ண்ய்) இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். பதிவிறக்கம் செய்து தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் வெவ்வேறு வழக்குரைஞா் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை ஜூலை 2 -ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சாா்பு செயலா், சட்டத் துறை, முதல் தளம் தலைமை செயலகக் கட்டடம், புதுச்சேரி என்ற முகவரியில் சமா்ப்பிக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.