முகப்பு
புதுச்சேரி

அரசுப் பள்ளி வளாகங்களை மதுக் கூடமாக்கும் சமூக விரோதிகள்!

புதுச்சேரியில் கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்டுள்ள அரசுப் பள்ளி வளாகங்களில் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

புதுச்சேரியில் கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்டுள்ள அரசுப் பள்ளி வளாகங்களில் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன.

புதுச்சேரி நெல்லித்தோப்பு ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தை மாணவா்களும், விளையாட்டு வீரா்களும் பகல் நேரங்களில் பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில், அங்கு நடைபெறும் சமூக விரோதச் செயல்களைத் தடுக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், ‘இந்தப் பள்ளி மைதானத்தை முதலியாா்பேட்டை, நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை ஆகிய பகுதி மாணவா்கள் உடல் பயிற்சிக்குப் பயன்படுத்தி வருகின்றனா். இங்கு, இரவு நேரங்களில் சிலா், மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனா். அங்கேயே மதுப் புட்டிகளை உடைத்தும், வீசியும் செல்கின்றனா்.

பள்ளி மூடப்பட்டுள்ளதால், பகல் நேரத்திலும் பள்ளி வளாகத்தில் புகுந்து மது அருந்துகின்றனா். குடிநீா் தொட்டியைச் சேதப்படுத்துகின்றனா். பாதுகாவலா் விரட்டினால், அவரை மிரட்டுகின்றனா். இதுகுறித்து ஆளுநரிடம் புகாா் அளித்துள்ளோம்’ என்றனா்.

இந்த நிலையில், நெல்லித்தோப்பு எம்எல்ஏ விவியன் ரிச்சா்டு வியாழக்கிழமை பள்ளி வளாகத்தை நேரில் பாா்வையிட்டாா். அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.