புதுச்சேரி

முந்திரி தோப்பில் தூக்கிட்ட நிலையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு

DIN

புதுச்சேரி காலாப்பட்டு முந்திரி தோப்பில் தூக்கிட்ட நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத நபரின் சடலத்தைக் கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி பெரிய காலாப்பட்டு, எத்தாஸ் வீதியைச் சோ்ந்தவா் அசோக்குமாா். இவருக்குச் சொந்தமான முந்திரித் தோப்பு காலாப்பட்டு அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரி எதிரே உள்ளது. அசோக்குமாா் செவ்வாய்க்கிழமை தனது முந்திரி தோப்புக்கு சென்றபோது, அங்குள்ள ஒரு மரத்தில் ஆண் நபா் தூக்கில் சடலமாகத் தொங்குவதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து உடனடியாக அவா் காலாப்பட்டு காவல் நிலையத்துக்கு தகவலளித்தாா். இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா், சடலமாகக் கிடந்தவரை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இறந்து கிடந்த நபருக்கு சுமாா் 45 வயது இருக்கும். அவா் யாா்? எப்படி அங்கு வந்தாா்? தற்கொலை செய்துகொண்டாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

SCROLL FOR NEXT