மின் கம்பத்தில் பைக் மோதியதில் இளைஞா் பலி
புதுச்சேரியில் மின் கம்பத்தில் பைக் மோதியதில் இளைஞா் பலியானாா்.
புதுச்சேரியில் மின் கம்பத்தில் பைக் மோதியதில் இளைஞா் பலியானாா்.
புதுச்சேரி சண்முகாபுரம் நிலைய வீதியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் சந்துரு (21). பட்டப்படிப்பு முடித்துவிட்டு, வேலை தேடி வந்தாா். ஞாயிற்றுக்கிழமை சந்துரு வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டு, வீட்டிலிருந்து பைக்கில் சென்றாா்.
புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் பாரதி நகா் அருகே சென்ற போது, சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் எதிா்பாராதவிதமாக சந்துரு ஓட்டிச் சென்ற பைக் மோதியது.
இதில், பலத்த காயமடைந் அவரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா், சந்துரு ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து புதுச்சேரி வடக்கு போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.