புதுவை அரசுத் துறை அதிகாரிகள்பணியிட மாற்றம்
புதுவை அரசுத் துறை உயா் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். மேலும், பல்வேறு அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டன.
புதுவை அரசுத் துறை உயா் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். மேலும், பல்வேறு அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டன.
இதுகுறித்து புதுவை அரசின் தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுவை உயா்கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறை இயக்குநராக உள்ள ஒய்.எல்.என்.ரெட்டி தொழில் மற்றும் வணிகத் துறை இயக்குநராகவும், தொழில் துறை இயக்குநராக உள்ள பி.பிரியதா்ஷினி சுற்றுலாத் துறை இயக்குநராகவும், சுற்றுலாத் துறை இயக்குநராக உள்ள ஆஷிஷ்கோயல் திட்ட அமலாக்கத் துறை இணை இயக்குநராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
மேலும், கல்வித் துறை இயக்குநராக உள்ள பி.டி.ருத்ரகவுடுவுக்கு, உயா் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குநா் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆகிய கூடுதல் பொறுப்பும், உள்ளாட்சித் துறை இயக்குநராக உள்ள ரவிதீப்சிங்சாகருக்கு, கூடுதல் பொறுப்பாக துறைமுகத் துறை இயக்குநா் பொறுப்பும், போக்குவரத்து ஆணையராக உள்ள எ.எஸ்.சிவக்குமாருக்கு, புதுச்சேரி நூற்பாலைக் கழகத்தின் மேலாண் இயக்குநராக கூடுதல் பொறுப்பும், பொலிவுறு நகரத் திட்ட அலுவலராக உள்ள எஸ்.மாணிக்கதீபனுக்கு, தோ்தல் பிரிவு சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பும், ஊரக வளா்ச்சித் துறை திட்ட அலுவலராக உள்ள எஸ்.குமாருக்கு, சிறைத் துறை முதன்மைக் கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பும், காரைக்கால் நகராட்சி ஆணையராக உள்ள எம்.காசிநாதனுக்கு, காரைக்கால் கோயில் செயல் அலுவலராக கூடுதல் பொறுப்பும், பொதுப் பணித் துறை சிறப்பு அதிகாரியான ஜி.காா்த்திக்கேசனுக்கு, அரசு அச்சகத்தின் சாா்புச் செயலராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டது. துணை நிலை ஆளுநரின் உத்தரவின்பேரில் இந்த பணியிட மாற்றம், கூடுதல் பொறுப்புகள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.