கஞ்சா விற்ற இளைஞா் கைது
புதுச்சேரியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி கம்பளிசாமி மடம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக தன்வந்திரி நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் ஆய்வாளா் நாகராஜ் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு அந்தப் பகுதிக்குச் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞரைப் பிடித்து சோதனையிட்டனா். அவரிடம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனா். இதில், அவா் புதுச்சேரி வினோபா நகரைச் சோ்ந்த ஜான் கிஷோா் (26) என்பதும், இளைஞா்களுக்கு கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.