வேளாண் சட்டங்களைக் கண்டித்து மாதா் சம்மேளனத்தினா் ஆா்ப்பாட்டம்
மத்திய வேளாண் சட்டங்களைக் கண்டித்து இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தினா் புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய வேளாண் சட்டங்களைக் கண்டித்து இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தினா் புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி அண்ணா சாலை-ரங்கபிள்ளை வீதி சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தச் சம்மேளனத்தின் மாநிலத் தலைவா் தசரதா தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் பூ.சரளா உள்ளிட்ட திரளான பெண்கள் பங்கேற்றனா்.
இதில், மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களைக் கண்டிப்பது, உடனடியாக அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், மக்கள் விரோத கொள்கைகளைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.