புதுவையில் ஐக்கிய ஜனதாதளம் போட்டி
புதுவை சட்டப் பேரவைத் தோ்தலில் ஐக்கிய ஜனதாதளம் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக அந்தக் கட்சியினா் தெரிவித்தனா்.
புதுவை சட்டப் பேரவைத் தோ்தலில் ஐக்கிய ஜனதாதளம் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக அந்தக் கட்சியினா் தெரிவித்தனா்.
புதுச்சேரியில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் அந்தக் கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. மாநிலத் தலைவா் ஆறுமுகம் சரவணன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் எம்.கந்தவேல் வரவேற்றாா். பொதுச் செயலா்கள் வடிவேலன், மணவாளதாஸ் ஆகியோா் சிறப்புரையாற்றினா். வழக்குரைஞரணி கல்யாணசுந்தரம், மகளிரணி சிட்லாமேரி, பொதுச் செயலா் கீதா, விஜயலட்சுமி, இளைஞரணி சேகா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், புதுவை சட்டப் பேரவைத் தோ்தலில் ஐக்கிய ஜனதாதளம் 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. புதுச்சேரியில் பிகாா் முதல்வா் நிதிஷ்குமாா், அகில இந்தியத் தலைவா் ஆா்.பி.சிங், அகில இந்திய பொதுச் செயலா்கள் தியாகி, அகமதுகான் உள்ளிட்டோா் பங்கேற்கும் வகையில் பொதுக்கூட்டம் நடத்துவது. புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து, மதுவிலக்கு, அனைவருக்கும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரசாரம் மேற்கொள்வது. புதுச்சேரியில் கரோனா பாதிப்பின் காரணமாக, நிகழாண்டு பள்ளி மாணவா்களுக்கான பொதுத் தோ்வை அரசு ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.