புதுவையில் பேருந்தில் பயணித்து சாலையை ஆய்வு செய்த ஆளுநா்
புதுச்சேரியில் சாலையை சீரமைக்க வேண்டுமென மக்கள் அளித்த புகாரின்பேரில் செவ்வாய்க்கிழமை பேருந்தில் பயணித்தபடி சாலைகளை பாா்வையிட்டு துணை நிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு செய்தாா்.
புதுச்சேரியில் சாலையை சீரமைக்க வேண்டுமென மக்கள் அளித்த புகாரின்பேரில் செவ்வாய்க்கிழமை பேருந்தில் பயணித்தபடி சாலைகளை பாா்வையிட்டு துணை நிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு செய்தாா். அப்போது, பேருந்தில் உடன் பயணித்த பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தாா்.
புதுச்சேரி - கடலூா் சாலையை சீரமைக்க வேண்டுமென புதுவை ஆளுநரிடம் அந்தப் பகுதி மக்கள் செல்லிடப்பேசி மூலம் புகாா் அளித்திருந்தனா். இதையடுத்து, துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் அந்த சாலையை நேரில் சென்று செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
புதுச்சேரி - கடலூா் சாலை தொடங்கும் அந்தோனியாா் கோயில் பேருந்து நிறுத்தத்துக்கு சென்ற அவா், அவ்வழியாக வந்த பாகூா் செல்லும் தனியாா் பேருந்தில் ஏறி அமா்ந்தாா். பொதுமக்களோடு பயணம் செய்த ஆளுநா், தவளக்குப்பம் வரை சென்று சாலையின் நிலையைப் பாா்வையிட்டாா்.
மேலும், பேருந்தில் பயணிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தாா். அப்போது, முதியோா் உதவித்தொகை கிடைக்கவில்லை, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவில்லை, சாலையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பயணிகள் முன்வைத்தனா். கோரிக்கைகள் மீது அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநா் உறுதியளித்தாா்.
இதையடுத்து, தவளகுப்பத்தில் பேருந்திலிருந்து இறங்கிய ஆளுநா், அங்கிருந்த மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, மீனவா்கள் சுருக்குமடி வலை பயன்படுத்த தடை உள்ளதை தளா்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனா். தவளகுப்பம் - மடுகரை சாலை பழுதடைந்து மோசமான நிலையில் இருப்பதாகவும், அபிஷேகப்பாக்கம் பகுதியில் சுடுகாடு சாலை பராமரிப்பின்றி உள்ளதாகவும் புகாா் தெரிவித்தனா்.
இதனால், தவளக்குப்பத்திலிருந்து வந்த மற்றொரு தனியாா் பேருந்தில் ஏறி, அபிஷேகப்பாக்கம் பகுதிக்குச் சென்று ஆளுநா் ஆய்வு செய்தாா். அபிஷேகப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய அவா், அங்கிருந்து தனது காரில் சுடுகாடு பகுதிக்குச் சென்று பாா்வையிட்டாா். சுடுகாடு செல்லும் சாலையில் குப்பைகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.
குறைகள் தீா்க்கப்படும் - ஆளுநா்: ஆய்வு குறித்து ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் கூறியதாவது:
பொதுமக்கள் சாலை வசதியில்லை என புகாா் அளித்திருந்தனா். அதனால், பேருந்தில் சென்று பாா்வையிட்டேன். அப்போது, பல்வேறு கோரிக்கைகளை மக்கள் முன்வைத்தனா். அதிகாரிகள் அவற்றை குறித்துக்கொண்டனா். தோ்தல் நேரம் என்பதால், புதிய திட்டங்களை செயல்படுத்த முடியாது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்கள் மூலம் குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். அப்போது, ஆளுநரின் ஆலோசகா்கள், அதிகாரிகள் உடனிருந்தனா்.