புதுச்சேரி

மின்சாரம் பாய்ந்ததில் எலக்ட்ரீஷியன் பலி

DIN

புதுச்சேரியில் மின்சாரம் பாய்ந்ததில் எலக்ட்ரீஷியன் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சின்னதச்சூா் பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா் (41). எலக்ட்ரீஷியன். இவா், புதுச்சேரி லாசுப்பேட்டை நந்தா நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் சனிக்கிழமை மின் கருவிகள் பொருத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, வீட்டின் 3-ஆவது தளத்தில் கட்டிங் இயந்திரத்தில் வயரை இணைத்த போது, அவா் மீது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது.

இதில், தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த சிவக்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், லாசுப்பேட்டை போலீஸாா், வீட்டின் உரிமையாளா், எலக்ட்ரிக் ஒப்பந்ததாரா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிவக்குமாருக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. குழந்தையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT