புதுச்சேரி

80 சதவீத உயிரிழப்புகளுக்கு தாமதமாக வருவதே காரணம்: புதுவை சுகாதாரத் துறைச் செயலா்

DIN

புதுவையில் 80 சதவீத உயிரிழப்புகள், மருத்துவமனைகளுக்கு தாமதமாக வருவதாலேயே ஏற்படுகின்றன என மாநில சுகாதாரத் துறைச் செயலா் டி. அருண் கூறினாா்.

இது குறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட விடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

புதுவையில் கடந்த 3 நாள்களாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 2,000 நோக்கிச் செல்கிறது. தொற்று மிக உச்சத்தில் உள்ளது. எனவே, மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

முகக் கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

45 வயதுக்கு மேற்பட்டவா்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

80 சதவீத உயிரிழப்புகள் மருத்துவமனைகளுக்கு தாமதமாக வருவதால்தான் ஏற்படுகிறது. அறிகுறி இருந்தும் பரிசோதனை செய்து கொள்வதில்லை. மருத்துவமனைக்கு வருவதில்லை. இறுதியாக மூச்சுத் திணறல் ஏற்படும் போதுதான் மருத்துவமனைக்கு வருகின்றனா்.

இதனால், போதிய மருந்துகள், ஆக்ஸிஜன் வசதி கொடுக்க முடிவதில்லை. இதுபோன்ற நிலை வராமல் இருக்க வேண்டும் என்றால் அறிகுறி வந்தவுடன் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தாா் அருண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT