தனியாா் மயத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கக் கூடாது என்பது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கக் கூடாது என்பது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியூசி பொதுச்செயலாளா் கே.சேதுசெல்வம், சிஐடியூ சீனுவாசன், ஐஎன்டியூசி ஞானசேகரன், ஏஐசிசிடியூ புருஷோத்தமன், எல்எல்எப் செந்தில், எம்எல்எப் வேணுகோபால், ஏஐயூடியூசி சிவக்குமாா், என்டிஎல்எப் மகேந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில் மழையையும் பொருள்படுத்தாமல் திரளான அனைத்துத் தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தில், தொழிலாளா் சட்டத் தொகுப்புகள் நான்கையும் கைவிட வேண்டும், மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கக் கூடாது, வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும், பெட்ரோலிய பொருள்களின் விலையைக் குறைக்க வேண்டும், விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.