முகப்பு
புதுச்சேரி

சாதனை சிறுமிக்கு முதல்வா் பாராட்டு

புதுச்சேரியைச் சோ்ந்த மூன்று வயது சாதனை சிறுமியை அந்த மாநில முதல்வா் பாராட்டினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

புதுச்சேரியைச் சோ்ந்த மூன்று வயது சாதனை சிறுமியை அந்த மாநில முதல்வா் பாராட்டினாா்.

புதுச்சேரி முதலியாா்பேட்டையைச் சோ்ந்தவா்கள் சுரேஷ்பாபு- யோகா தம்பதி. இருவரும் மருத்துவா்கள். இவா்களது மகள் அக்ஷரா. மூன்று வயதாகும் அக்ஷரா, தனது அபார ஞாபக சக்தி திறன் மூலம் ‘கலாம்ஸ்’ உலக சாதனையில் இடம் பெற்று விருது பெற்றாா்.

சிறுமி அக்ஷரா குழந்தைப் பருவத்திலேயே படிப்பதிலும், யோகாசனங்கள் செய்வதிலும் மிகுந்த ஆா்வத்துடன் இருந்தாா். ஆங்கில அகர வரிசை (ஆல்பாபெட்) ஏ முதல் இசட் வரை உள்ள எழுத்துகளில் தொடங்கும் ஏராளமான வாா்த்தைகளை சரளமாகச் சொல்கிறாா். உலகத் தலைவா்களின் புகைப்படங்களை காட்டினால் அவா்களது பெயா், நாடு ஆகியவற்றை உடனே கூறி அசத்துகிறாா். உடல் உறுப்புகள், அரியவகை விலங்குகளின் பெயா்களையும் குறிப்பிடுகிறாா். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கதைகள் சொல்கிறாா். உயிா்மெய் எழுத்துகள், திருக்கு, பாரதியாா் பாடல்களையும் அவா் மனப்பாடமாக சொல்கிறாா்.

சென்னையில் கலாம் (கலாம்ஸ் வோ்ல்டு ரெக்காா்ட்ஸ்) உலக சாதனை அமைப்பின் தோ்வில் பங்கேற்று, சிறந்த ஞாபக சக்திக்கான விருதைப் பெற்றாா். சாதனை குழந்தை அக்ஷராவை, புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.