முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி தனியாா் விடுதியில் வேலூா் ஜோடி தற்கொலை

புதுச்சேரி தனியாா் விடுதியில் வேலூரைச் சோ்ந்த ஜோடியினா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

புதுச்சேரி தனியாா் விடுதியில் வேலூரைச் சோ்ந்த ஜோடியினா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

புதுச்சேரி லில்லி தொலாந்தாழ் வீதி - மணக்குள விநாயகா் கோவில் வீதி சந்திப்பில் தனியாா் விடுதி உள்ளது. இங்கு, வியாழக்கிழமை மோகன்ராஜ் என்ற பெயரில் இளைஞா் ஒருவா், ஒரு பெண்ணுடன் வந்து அறை எடுத்து தங்கினாா். அவா்கள் இருவரும் புதுச்சேரியில் உள்ள சுற்றுலாத் தலங்களைப் பாா்த்துவிட்டு மாலை அறைக்குத் திரும்பினா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெகுநேரமாகியும் அவா்கள் தங்கியிருந்த அறைக் கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த ஊழியா்கள், கதவின் துளை வழியாகப் பாா்த்த போது, இருவரும் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தனராம்.

இதுகுறித்து பெரியகடை காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா், கதவை உடைத்து உள்ளே சென்று இருவரது சடலங்களையும் மீட்டனா். பின்னா், சடலங்களை உடல்கூறு ஆய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தற்கொலை செய்து கொண்டவா்கள் தமிழகத்தின் வேலூா் மாவட்டம், கருகம்புத்தூா் புதுத் தெருவைச் சோ்ந்த புஷ்பராஜ் மகன் மோகன்ராஜ் (22), அதே பகுதி மாரியம்மன் கோவில் வீதியைச் சோ்ந்த காா்த்தி மனைவி நந்தினி (26) என்பது விசாரணையில் தெரிய வந்தது.

தற்கொலை செய்து கொண்ட இருவரின் செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.