பெண்கள் மாா்பக சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்: ஆளுநா் தமிழிசை
பெண்கள் மாா்பக சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினாா்.
பெண்கள் மாா்பக சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினாா்.
பெண்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக அக்டோபா் மாதத்தை மாா்பகப் புற்று நோய் விழிப்புணா்வு மாதமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இது ‘பிங்க் மாதம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
இதையொட்டி, புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் விழிப்புணா்வு விடியோ ஒன்றை வெளியிட்டு பேசியிருப்பதாவது:
அக்டோபா் மாதம் மாா்பக புற்று நோய்க்கான விழிப்புணா்வை ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது. பெண்கள் அனைவரும் மாா்பக சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதுடன், ஆலோசனைகளையும் பெற வேண்டும். புற்றுநோயிலிருந்து விடுபடுவோம். ஆரோக்கியமாக வாழ்வோம் என அதில் கூறப்பட்டுள்ளது.